இலங்கைக்கு ஐ.எம்.எஃப். கடன் கிடைக்க சீனா இணங்கியது – இது என்ன தாக்கத்தை ஏற்படும்?

Share

ரணில்

பட மூலாதாரம், Getty Images

சீனாவிடமிருந்து கிடைக்கப் பெற்ற கடன் மறுசீரமைப்பிற்கான நிதி உறுதிப்பாட்டு கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை தானும், இலங்கை மத்திய வங்கி ஆளுநரும் கையெழுத்திட்டு, சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தின் தற்போதைய நிலைமை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் ஆகியன குறித்து, நாடாளுமன்றத்தில் நேற்று (மார்ச்.07) விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்படி, சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து கடன் மறுசீரமைப்புக்கான நிதி உறுதி கடிதம் தனக்கு நேற்றிரவு கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு கிடைக்கப் பெற்ற கடிதத்தில் தானும், இலங்கை மத்திய வங்கி ஆளுநரும் கையெழுத்திட்டு, அதனை உடனடியாக சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com