இம்ரான் கான் விவகாரம்: பாகிஸ்தான் ஆபத்தான நிலையில் இருக்கிறதா?

Share

பாகிஸ்தான் அரசியல் - இம்ரான் கான்

பட மூலாதாரம், RAHAT DAR/EPA-EFE/REX/SHUTTERSTOC

லாகூரில் இரண்டாவது நாளாக, இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் தொடர்ந்தது. ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டுடன் இம்ரான் கானைக் கைது செய்ய மான் பார்க் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு விரைந்தது காவல் துறை.

இம்ரான் கான் கைதாவதை தவிர்க்கிறார். இந்தக் கைது நடவடிக்கை, தன்னைக் கடத்தவோ கொல்லவோ செய்யப்படும் சதி என்று அவர் அச்சம் தெரிவிக்கிறார்.

மறுபுறம், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், காவல்துறை அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவே சென்றதாக பாகிஸ்தான் அரசு கூறுகிறது.

விசாரணைக்கு ஆஜராகுமாறு எச்சரித்தும் பலமுறை அலட்சியப்படுத்திய இம்ரான் கான் மீது பாகிஸ்தானில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com