ஆனால் அது பற்றி இருவரும் கருத்து தெரிவிக்க மறுத்து வருகின்றனர். திருமண உறவுகள் குறித்து தீபிகா படுகோன் அளித்துள்ள சிறப்பு பேட்டியில், “திரைப்படங்கள், உறவுகள் மற்றும் நம்மை சுற்றி நடக்கும் திருமணங்களின் தாக்கங்களை பார்த்துத்தான் நாம் வளர்ந்திருப்பதாக நான் நினைக்கிறேன்.
நாம் பயணிக்கும் பயணம் அல்லது இரண்டு பேர் பயணிக்கும் பயணம் வேறொருவரின் பயணத்தில் இருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்பதை எவ்வளவு சீக்கிரம் ஏற்றுக் கொள்வீர்களோ அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அனைவருக்கும் பொறுமை மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறேன். பலருக்கும் பொறுமை குறைவாக இருப்பதாகவே நினைக்கிறேன். எல்லோரையும் போல் எனது வெற்றிகரமான உறவுக்கு பொறுமை முக்கிய காரணமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.