கோவிட் தொடர்பான உலக சுகாதார அமைப்பின் அவசரக்குழு ஒவ்வொரு மூன்றும் மாதங்களுக்கு ஒருமுறையும் கூடுகிறது. அடுத்த கூட்டம் மே மாதத் தொடக்கத்தில் கூடவுள்ளது. அதன் முந்தையக் கூட்டங்களைப் போலவே இந்தக் கூட்டமும் பொது சுகாதார அவசரநிலை (PHEIC) உள்ளதா என்பதைத் தீர்மானிக்கும்.
இதேபோல் ஜனவரி 30, 2020 அன்று கொரோனாவை PHEIC -ஆக அறிவித்தது உலக சுகாதார அமைப்பு. அப்போது சீனாவில் மட்டும் 100-க்கும் குறைவான நோயாளிகள் இருந்தனர். சீனாவை தாண்டி வேறு எங்கும் இறப்புகளும் பதிவாகவில்லை. மார்ச் 2020-ல் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானோம், கொரோனாவை ஒரு தொற்றுநோய் என அறிவித்த பிறகே அனைத்து நாடுகளும் தடுப்புப் பணிகளில் இறங்கின.