அப்போது, “இன்றைய பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. எங்களுடைய வேண்டுகோள்களையும், கோரிக்கைகளையும் திமுக குழுவிடம் சமர்ப்பித்திருக்கிறோம்.
இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தையின் முடிவுகளை அறிவிப்போம்.
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான். அது முடிவில்லாதது. அதனால் இந்தக் கூட்டணி தொடரும்.

ராஜ்ய சபை சீட் தொடர்பாக கோரிக்கை வைத்திருக்கிறோம். மதிமுக இந்த முறை தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் 6 தொகுதிகளில் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.