இந்திய அரசியலமைப்பு அவையில் இடம்பிடித்த 15 பெண்கள் யார்? தமிழ்நாட்டுக்கு என்ன தொடர்பு?

Share

இந்திய அரசியல் சாசன சபையில் பெண்களின் பங்கு

பட மூலாதாரம், Hachette India

படக்குறிப்பு, தி ஃபிப்டீன் புத்தகத்தின் முகப்பு

இந்திய அரசியலமைப்பு அவையின் 299 உறுப்பினர்களில் 15 பேர் மட்டுமே பெண்களாக இருந்தனர். இந்திய அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் இப்போது வரை குறைவாகவே இருக்கும் நிலையில், அரசியலமைப்பு அவையில் இடம்பெற்ற இந்தப் பெண்களில் சிலர், பல சமூகத் தடைகளை உடைத்தனர் என்கிறது புதிதாக வெளிவந்துள்ள ஒரு புத்தகம்.

இந்தியா குடியரசு நாடாகி 70 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை 1917இல் எழுப்பப்பட்டது. அந்தப் புள்ளியிலிருந்து இந்திய அரசியலில் பெண்களின் பங்களிப்பு வெகுதூரம் நகர்ந்து வந்திருக்கிறது. ஆனாலும், பெண்களின் பங்களிப்பு பெரிய அளவில் உயரவில்லை. இந்திய மக்களவையில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 15 சதவீதம்தான்.

ஆனால், இந்திய அரசியலமைப்பு அவை உருவாக்கப்பட்டபோது இருந்த விகிதத்தோடு ஒப்பிட்டால் நிலைமை சற்று மேம்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். இந்திய அரசியலமைப்பு அவை உருவாக்கப்பட்டபோது அதில் 299 உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த 299 பேரில் 15 பேர் மட்டுமே பெண்கள். அதாவது, மொத்த எண்ணிக்கையில் வெறும் ஐந்து சதவீதம் பேர் மட்டுமே பெண்கள்.

இந்திய அரசியலமைப்பு அவையில் மாகாணங்களில் இருந்தும் சமஸ்தானங்களில் இருந்தும் பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர். ஆனால், அந்தக் காலகட்டத்தில் பல பிரிவினருக்குப் போதுமான பிரதிநிதித்துவம் அந்த அவையில் கிடைக்கவில்லை. அந்த அவையில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 15ஆக மட்டுமே இருந்தது. ஆனால், இந்த 15 பெண்களும் தேசத்தின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com