இந்தியா, ரஷ்யா உறவின் எதிர்காலம் பற்றி புதின் பேசியது என்ன?

Share

இந்தியா, ரஷ்யா உறவுகள் - அதிபர் புதின் வருகை - பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இரண்டு நாள் பயணமாக டிசம்பர் 4ஆம் தேதி இந்தியா வந்தார். கடந்த 2022ஆம் ஆண்டு யுக்ரேன் மீதான தாக்குதல் தொடங்கிய பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறை. 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டிலும் அவர் பங்கேற்கவில்லை.

புதின், இன்று (டிசம்பர் 5) டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்தார். இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ அவரை வரவேற்றார். அவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது. அதன் பிறகு அவர் மகாத்மா காந்தி நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து ஹைதராபாத் ஹவுஸ் வந்த புதினை, பிரதமர் மோதி வரவேற்றார். ஹைதராபாத் ஹவுஸில் இருவருக்கும் இடையே முக்கியமான சந்திப்பு நடைபெற்றது. பிரதமர் மோதி இந்தச் சந்திப்பை ‘வரலாற்றுச் சிறப்புமிக்கது’ என்று விவரித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, இந்தியா, ரஷ்யா இடையே, ஒத்துழைப்பு மற்றும் புலம்பெயர்தல், சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வி, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள், துருவக் கப்பல்கள் மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு, உரங்கள் இறக்குமதி தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com