`யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ எனக் கேள்விப்பட்டிருப்போம். இதற்கேற்றாற்போல `மழைக்காலம் வரும் முன்னே, டெங்கு வரும் பின்னே’ எனச் சொல்லுமளவிற்கு மழைக்காலம் வந்தவுடன் தொற்றிக் கொண்டே வந்துவிடுகிறது டெங்கு காய்ச்சல். டெங்கு பரவாமல் இருக்க, ஒருபுறம் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும், மற்றொரு புறம் தடுப்பூசிக்கான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நாட்டின் முன்னணி தடுப்பூசித் தயாரிப்பு நிறுவனமான, `இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட்’ டெங்கு தடுப்பூசிக்கான முதல்கட்ட பரிசோதனைக்கு அனுமதி பெற்றுள்ளது. இந்தத் தடுப்பூசியானது அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய சுகாதார நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து உருவாக்கப்படுகிறது.