ஆஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரகமதுல்லா சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? காவல்துறை கூறுவது என்ன?

Share

தமிழர் சுட்டுக்கொலை

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலியாவின் சிட்னி பகுதியில் தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ரகமதுல்லா சையித் அகமது என்பவர் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தார்.

மேற்கு சிட்னியில் உள்ள அவ்பேர்ன் ரயில் நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை இரவு 12 மணியளவில் சென்ற முகமது ரகமதுல்லா சையித் அகமது, அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த 28 வயது நபரை கத்தியால் குத்தியதாகவும் இதைத் தொடர்ந்து அருகில் இருந்த காவல் நிலையத்துக்கு சென்ற ரகமதுல்லா போலீசாரையும் தாக்க முயற்சித்ததாகவும் நியூ சவுத் வேல்ஸ் போலீஸார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸாரை அவர் கத்தியைக் கொண்ட தாக்க முயற்சித்தபோது, அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ரகமதுல்லா உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

“இச்சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது மற்றும் துரதிர்ஷ்டவசமானது. வெளியுறவு, வர்த்தகத் திணைக்களம், நியூசவுத் வேல்ஸ் அலுவலகம் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இந்த விஷயத்தை நாங்கள் கவனித்து வருகிறோம், ” என்று தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com