ஆருத்ரா கோல்ட் மோசடி: பா.ஜ.க நிர்வாகி ஆக நியமிக்கப்பட்டவர் உள்பட இருவர் கைது

Share

ஆருத்ரா கோல்ட் கோஸ்ட் மோசடி
படக்குறிப்பு,

மாலதி, ஹரீஷ்

ஆருத்ரா கோல்ட் என்ற நிறுவனத்தின் மூலம் அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி ஒரு லட்சம் பொதுமக்களிடமிருந்து சுமார் 2,400 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டி ஏமாற்றிய விவகாரத்தில் அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவருமான ஹரீஷ், அந்த நிறுவனத்தைச் சேர்ந்த மாலதி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஹரீஷ் பா.ஜ.கவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலச் செயலராக நியமிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், பிறகு அவர் அந்தப் பதவியை ஏற்கவில்லை; அவர் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக பா.ஜ.க. தற்போது கூறுகிறது.

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை அமைந்தகரையில் திறக்கப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் வைப்பு நிதிகளுக்கு வட்டியாக 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என அறிவித்தது இந்த நிறுவனம்.

சுமார் 20 இடங்களில் இந்த நிறுவனத்திற்குக் கிளைகள் திறக்கப்பட்டு, முதலீடுகள் பெறப்பட்டன. பல இடங்களில் தீவிர விளம்பரமும் செய்யப்பட்டது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com