பட மூலாதாரம், ANI
ஆப்கானிஸ்தானில் வெள்ளம் மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்தியா உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“சமீபத்திய வெள்ளம் மற்றும் நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தான் மக்கள் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்,” என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“இந்தக் கடினமான நேரத்தில் உதவுவதற்காக, இந்தியா மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் (HADR) பொருட்களை அனுப்பியுள்ளது.”
இந்தியா அனுப்பிய உதவிப் பொருட்களில் சமையலறைப் பொருட்கள், துப்புரவுப் பொருட்கள், பிளாஸ்டிக் தாள்கள், தார்ப்பாய் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் அடங்கும் என்று ரந்தீர் ஜெயஸ்வால் கூறியுள்ளார்.
“இந்தச் சவாலான நேரத்தில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளையும் ஆதரவையும் வழங்க இந்தியா உறுதிபூண்டுள்ளது,” என்றும் அவர் கூறினார்.