ஆப்கன் தாலிபன் பாகிஸ்தான் பாதுகாப்புக்கு ‘பெரும் அச்சுறுத்தலாக’ இருக்கிறதா?

Share

தாலிபான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்லாமாபாத்தில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் தான் காரணம் என பாகிஸ்தான் அரசாங்கம் நம்புகிறது

கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில், குறிப்பாக கைபர் பக்துங்வா மற்றும் பலுசிஸ்தானில் தீவிரவாத சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ள போதிலும், கடந்த வாரம் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல், நாட்டின் பாதுகாப்பு குறித்த ஆழமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

நவம்பர் 11 அன்று இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர், குறைந்தது 27 பேர் காயமடைந்தனர்.

இஸ்லாமாபாத் தாக்குதலுக்கு ஒரு நாள் முன்பு, வானா கேடட் கல்லூரியும் தாக்குதலுக்கு இலக்கானது. கட்டடத்திற்குள் மறைந்திருந்த நான்கு பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கை பல மணி நேரம் தொடர்ந்தது.

நவம்பர் 11 அன்று, கைபர் பக்துங்வா மாவட்டத்தின் தேரா இஸ்மாயில் கான் பகுதியில் பாதுகாப்புப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட ஐ.ஈ.டி (IED – மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள்) தாக்குதலில் ராணுவ அதிகாரிகள் சிலர் காயமடைந்தனர்.

நவம்பர் 14 அன்று, இஸ்லாமாபாத் தற்கொலைத் தாக்குதலில் தொடர்புடைய தெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தான் (TTP) அமைப்பைச் சேர்ந்த நான்கு பேரைக் கைது செய்ததாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com