மத்திய அரசு என்ன செய்து வருகிறது?
மனுதாரரின் வாதங்களுக்கு பதிலளித்த நீதிபதி சூரியகாந்த், “ஐபிஎல் பார்க்கும் ஆயிரக்கணக்கானோர் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர் என கிரிக்கெட்டின் கடவுளுக்கும் தெரியும். மத்திய அரசு என்ன செய்து வருகிறது என கேட்போம். இந்த பிரச்னையை சட்டத்தின் வாயிலாக தீர்க்க இயலாது. மக்கள் தானாக முன்வந்து சூதாட்டத்தில் ஈடுபடுவதை நாம் என்ன செய்ய முடியும்? நாங்கள் உங்கள் வாதங்களை ஆதரிக்கிறோம்.

ஆனால், சட்டத்தின் மூலமாக மட்டுமே சூதாட்டத்தை நிறுத்த இயலும் என்பது தவறான எண்ணம். கொலை செய்பவரை தண்டிக்க பிரிவு 302 ஐபிசி இருக்கிறது. ஆனால், மரண தண்டனையே கொடுத்தாலும் சமூகத்தில் கொலையை உங்களால் தடுக்க முடிந்ததா?’ என குறிப்பிட்டார்.
மேலும், இந்தப் பிரச்னையைத் தீர்க்க, மத்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது குறித்து விசாரிக்க வேண்டும். முதலில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பலாம். தேவைப்பட்டால் பின்னர் மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பலாம்” என்றார்.
தற்போது, பதில் கோரி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.