ஆந்திரா, தெலங்கானா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை என்ன? அவர்கள் கூறுவது என்ன?- பிபிசி கள நிலவரம்

Share

'வெள்ளத்தில் நாங்களும் அடித்து செல்லப்பட்டிருக்கலாம்!” :  ஆந்திரா, தெலங்கானா மக்களின் துயர்வ் நிலை, பிபிசி கள அறிக்கை
படக்குறிப்பு, கௌசியா

“அந்த வெள்ளத்தோடு நாங்களும் அடித்து செல்லப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது. எங்கள் நிலை மோசமாகிவிட்டது. வீடு முழுவதும் நீரில் மூழ்கிவிட்டது. எங்கள் உடைமைகள் எதுவுமே இப்போது இல்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. எனக்கும் எனது இரண்டு குழந்தைகளுக்கும் மீதமிருப்பது உயிர் மட்டும்தான்” என கௌசியா கண்ணீர் மல்க கூறுகிறார்.

ஆந்திர மாநிலத்திலுள்ள மிகப்பெரிய நகரமான விஜயவாடாவின் ராமகிருஷ்ணாபுரத்தில், புடமேரு நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள சிறிய வீட்டில் வசித்து வருபவர் கௌசியா.

தனது இரண்டு மகள்களுடன் வசித்து வரும் இவர் தையல் வேலை செய்து வருகிறார். வெள்ளம் அவரது குடும்பத்தை நிலைகுலைய செய்துவிட்டது.

தெலங்கானாவில் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கம்மம் மாவட்டம் பாலேரு தொகுதியை சேர்ந்த யாகூப் என்பவரின் குடும்பம் முழுவதுமாக அடித்து செல்லப்பட்டது. யாகூப்பின் மகன் ஷெரீப் மட்டும் உயிர் பிழைத்திருக்கிறார். யாகூப் இறந்துவிட்டார். அவரது மனைவி சைதாபி காணாமல் போனார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com