மொத்தம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்திருக்கும் நிலையில் அந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைத் தக்க வைத்திருக்கிறது. இந்த வெற்றிக்கு சுழற்பந்து வீச்சாளர்களான அஷ்வினும், ஜடேஜாவும் கூட ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம்.
இந்நிலையில் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் அறிவுரை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “ பெரும்பாலும் இந்தியாவில் விளையாடும் எதிரணியினர் சுழற்பந்து வீச்சாளர்களான அஷ்வின் மற்றும் ஜடேஜாவை போல பந்துவீச முயற்சிப்பார்கள். இந்தியாவில் எப்படி பந்து வீச வேண்டும் என்று அவர்கள் இருவருக்கும் நன்றாகவே தெரியும்.