அரிசிக்கும் ஜிஎஸ்டி வரியா? ஒன்றிய அரசுக்கு மநீம கண்டனம்

Share

சென்னை: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கை: ஏழை எளிய, நடுத்தர மக்களின் உணவான அரிசிக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதித்துள்ளது ஒன்றிய அரசு. அதுபோல், பொட்டலங்களில் அடைத்து விற்கப்படும் அத்தியாவசிய பொருட்களுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. புதிய வரியால் அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரிக்கும். ஏற்கனவே கடும் விலைவாசி உயர்வால் பரிதவிக்கும் பொதுமக்கள் மேலும் சிரமப்படுவார்கள். நீட் தேர்வை முன்வைத்து அரசியல் செய்யாமல், இதற்கு நிரந்தர தீர்வு காண அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய காலம் வந்துவிட்டது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com