இந்த அனுமதியை வழங்குவதற்கு, அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் மகன் பிரபு நிறுவனத்துக்கு ரூ.27.90 கோடி லஞ்சப் பணமாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதை லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரித்து உறுதிசெய்த நிலையில், வைத்திலிங்கம், அவரின் மூத்த மகன் பிரபு ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்” என்றனர்.