“அமெரிக்க விமானங்களுக்கு அனுமதி மறுத்தோம்” – இலங்கை அதிபரின் கருத்தால் எழும் விவாதம் என்ன?

Share

அமெரிக்க போர் விமானங்களை தரையிறக்க அனுமதி மறுப்பு, இலங்கை, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

பட மூலாதாரம், PMD SRI LANKA

படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அமெரிக்க போர் விமானங்களை தரையிறக்க இலங்கை அனுமதி மறுத்ததாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (மார்ச் 20) வெளியிட்ட கருத்து, தற்போது சர்வதேச ரீதியில் பேசு பொருளாகியுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் ஆகிய நாடுகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் மோதல்களில், இலங்கை நடுநிலைத் தன்மையுடன் செயற்பட்டு வருவதை வெளிகொணரும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்த விடயத்தை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இரானுக்கு சொந்தமான 3 கடற்படை கப்பல்கள் இலங்கைக்கு வருகைத் தர அனுமதி கோரிய நிலையில், அந்த விடயம் குறித்து ஆராய்ந்துக் கொண்டிருந்த தருணத்திலேயே அமெரிக்கா தமது போர் விமானங்களை இலங்கையின் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரியிருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய இரண்டு நாடுகளினாலும் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிடுகின்றார்.

இரானிய கப்பலுக்கு ஏன் அனுமதி வழங்கவில்லை என சிலர் கேள்வி எழுப்பிய நிலையிலேயே அவர் இந்த பதிலை வழங்கியுள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com