அமெரிக்கா போல இந்தியாவிலும் அதிபர் ஆட்சிக்கு மாற இந்திரா காந்தி காலத்தில் நடந்த முயற்சி பற்றி தெரியுமா?

Share

இந்திரா காந்தி, காந்தி, அவசர நிலை, குடியரசுத் தலைவர் ஆட்சி, காங்கிரஸ் கட்சி, வரலாறு

பட மூலாதாரம், Nora Schuster/Getty Images

படக்குறிப்பு, இந்திரா காந்தி

  • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

1970-களின் மத்திய பகுதியில், அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசர காலகட்டத்தில், இந்தியா சிவில் உரிமைகள் மறுக்கப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த சர்வாதிகாரப் போக்கின் திரைக்குப் பின்னால் அவரின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சி நாட்டின் பிம்பத்தை மாற்ற முயன்றது. கட்டுப்பாடுகள் மற்றும் சமநிலையைக் கொண்ட ஜனநாயக நாடாக இல்லாமல், கட்டுப்படுத்தப்பட்ட, அதிகாரம் மையப்படுத்தப்பட்ட ஒரு நாடாக இந்தியா மாறிக் கொண்டிருந்தது என்று வரலாற்று ஆய்வாளர் ஶ்ரீநாத் ராகவன் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

இன் இந்திரா காந்தி அண்ட் தி இயர்ஸ் தட் டிரான்ஸ்ஃபார்ம்டு இந்தியா (In Indira Gandhi and the Years That Transformed India) என்ற புத்தகத்தில் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் அவருக்கு கீழ் செயல்பட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி விசுவாசிகள் இந்தியாவை அமெரிக்கா பாணியிலான அதிபர் ஆட்சிமுறை கொண்ட நாடாக மாற்ற எப்படி முயன்றனர் என்று எழுதியுள்ளார்.

அத்தகைய சூழல், அதிகாரத்தை மையப்படுத்தி, நீதித்துறையை ஓரங்கட்டியிருக்கும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் இயங்கும் நாடாளுமன்றம் ஒரு வெறும் அடையாளமாகவே திகழ்ந்திருக்கும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com