அமெரிக்காவின் 500% வரிவிதிப்பு அச்சுறுத்தல்: திருப்பூர் ஆடை உற்பத்தித்துறையின் நிலை என்ன?

Share

அமெரிக்க வரி, திருப்பூர், ஜவுளித்துறை

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடந்த ஆண்டில் இருந்து கூடுதல் வரி விதிக்கப்பட்டதால் பல்வேறு துறைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயத்த ஆடை ஏற்றுமதியில் மட்டும் 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஜவுளி துறையினர் கூறுகின்றனர். இந்நிலையில் இந்திய தயாரிப்புகள் மீது 500 சதவிகிதம் வரை வரி விதிக்கும் மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இது அமெரிக்காவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அமலுக்கு வந்தால் தங்கள் நிலைமை சிக்கலுக்குள்ளாகும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியா–அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவுகளை மதிப்பீடு செய்யும் விதமாக, வர்த்தகம் சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழு ஜவுளித்தொழில் அமைப்பினரைச் சந்தித்து கருத்துகளைப் பெற்றுள்ளது.

கோவையில் இந்தக் குழுவைச் சந்தித்த ஜவுளித்துறையினர், அமெரிக்காவுக்கான ஏற்றுமதி வரி உயர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்பைச் சரி செய்வதற்கு பருத்தி மீதான இறக்குமதி வரி ரத்து, சந்தை ஊக்கத் திட்டத்தில் 20% மானியம் வழங்குதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.

தற்போதுள்ள நிலை நீடித்தால் அல்லது வரி மேலும் உயர்த்தப்பட்டால் இங்குள்ள நிறுவனங்கள் இலங்கைக்கு இடம் பெயரும் வாய்ப்பு இருப்பதாகவும் ஜவுளித்தொழில் அமைப்பினர் கூறுகின்றனர்.

ஒரே ஆண்டில் இரட்டிப்பான அமெரிக்க வரி

அமெரிக்க வரி, திருப்பூர், ஜவுளித்துறை

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டுமென்ற நிர்ப்பந்தத்துடன், இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கான வரியை கடந்த ஆண்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பல மடங்கு உயர்த்தினார். இதில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் நூல் மற்றும் ஆடைகளுக்கும் இரட்டிப்பாக வரி உயர்த்தப்பட்டது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com