“அந்த வீரர் இரட்டை சதமடித்தபோதே என் கரியர் முடிந்துவிட்டது” – மனம் திறக்கும் ஷிகர் தவான் | former indian cricketer shikhar dhawan opens about his career end

Share

நான் நிறைய அரைசதங்கள் அடித்திருக்கிறேன். சதங்கள் பெரிதாக அடித்ததில்லை, ஆனால் 70+ ரன்கள் நிறைய அடித்திருக்கிறேன்.

இஷான் கிஷன் அன்று இரட்டைச் சதம் அடித்தபோது, “உன் கரியரின் எண்ட் இதுவாக இருக்கலாம்” என்று என் உள்ளுணர்வு என்னிடம் கூறியது. பின்னர் அதுதான் நடந்தது.

எனது நண்பர்கள் ஆறுதல் கூறினார்கள். நான் உடைந்துபோய்விடுவேன் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், நான் நன்றாகத்தான் இருந்தேன்.” என்று கூறினார்.

ஷிகர் தவான் - டிராவிட்

ஷிகர் தவான் – டிராவிட்

அந்த சமயத்தில் அணி வீரர்கள் யாராவது தங்களைத் தொடர்புகொண்டார்களா என்ற கேள்விக்கு, “இல்லை, அது அப்படி நடக்காது.

டிராவிட்டிடம் (அப்போதைய பயிற்சியாளர்) நான் பேசியிருக்கலாம். அவர் எனக்கு மெசஜ் செய்திருந்தார்.

மற்றபடி, வீரர்களுக்கு அவரவர் பயணம் உண்டு. எனவே இது சாதாரணமான ஒன்று.

அணியிலிருந்து நான் கழற்றிவிடப்படுவதும் அல்லது சேர்க்கப்படுவதும் என இதுவொன்றும் எனக்கு முதல்முறை நடப்பது அல்ல.

14 வயதிலிருந்தே நாங்கள் அதற்குப் பழகிவிட்டோம்.” என்று கூறினார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com