அவரின் பேச்சை நம்பி மாரிசாமி ரூ.8.2 லட்சத்தை சிவக்குமாரின் சகோதரி சத்ய பாமா மற்றும் அவரின் பிசினஸ் பார்ட்னர் மணிகண்டன் ஆகியோரிடம் கொடுத்திருக்கிறார். பணத்தைக் கொடுத்து கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாகியும் ஆத்மா சிவக்குமார் வேலை வாங்கித் தரவில்லை.
இதையடுத்து, மாரிசாமி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். அதனடிப்படையில் ஆத்மா சிவக்குமார், மணிகண்டன், சத்ய பாமா, அவரின் கணவர் ஜெய் கிருஷ்ணன் ஆகியோர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்தனர்.