இந்திய ஆண்கள் அணியுமே எந்தவிதமான சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்க முடியாது. இந்தியன் சூப்பர் லீக் தொடர் நடைபெறுவதில் எந்த சிக்கலும் இல்லையெனினும் வெளிநாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் சிக்கல் இருக்கக்கூடும். இது சில அணிகளுக்கு பின்னடைவாகவும் இருக்கும். ஒட்டுமொத்தத்தில் இந்தத் தடை உத்தரவு இந்திய கால்பந்திற்கு பெரும் சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது.
FIFA அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தலை முறையாக நடத்தி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறபட்சத்தில் இந்தத் தடை உத்தரவு விலக்கிக்கொள்ளப்படும். மேலும், இதுதொடர்பான வழக்கும் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதில், நீதிபதிகள் தெரிவிக்கப்போகும் கருத்தும் முக்கியமானதாக இருக்கும்.
இந்திய விளையாட்டுச் சங்கங்களில் பிரச்னை இல்லாத சங்கங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தளவுக்கு எல்லா சங்கங்களும் நிர்வாகக் கோளாறுகளில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது.