5,000 ஆண்டுக்காலமாக இருந்த இந்த சாதனத்திற்கு எதிராக… நூறாண்டு காலமாக காங்கிரஸ், பொதுவுடைமை கட்சிகள், திராவிட இயக்கங்களும் போராடி வருகின்றன. அண்ணாமலை வரலாற்றை திணிக்க பார்க்கிறார். ஏதோ… இந்த சமூக நீதிக்கு நாங்க எதிராக இருக்கிறதாகவும், அவர் ஆதரவாக இருக்கிறதாக தோற்றத்தை ஏற்பாடு செய்கிறார், அது தவறானது. இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு எல்லாம் காரணம், உங்களுடைய சனாதன தர்மம்தான். அதை நீங்கள் தர்மம் என்று சொல்கிறீர்கள், நாங்க அதை ஏற்றுக்கொள்ளவில்லை. சமூக ஒற்றுமை, அனைவரும் சமம் என்பதுதான் தர்மம். நிறம், மதம், பிறப்பின் பெயரால் பாகுபாடு காட்டாமல் இருப்பதுதான் தர்மம், அதைதான் நாங்கள் ஆதரிக்கிறோம். எனவே, இந்த வெற்றி எங்களுக்கே என்பதனை அண்ணாமலைக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
யாராவது பீஃப் கடை கேட்டு, அனுமதி தரமாட்டேன் என்று கூறியிருந்தால்தான் தவறு. யாரும் கேட்காத போது கடையை தர முடியாது தானே. தேஷ்வுக் மோடிக்கு எதிராக ஒரு கருத்தையும் சொல்ல மாட்டார். ஒவ்வொரு கருத்து கணிப்பிற்கு பின்னாலும் ஒரு கருத்து திணிப்பு இருக்கிறது. அதனால்தான் பெரும்பாலானோர் கருத்துக்கணிப்பை நம்புவது கிடையாது. அதேபோல, திமுக அரசு கொள்கை ரீதியான தவறு செய்தால் கண்டிப்பாக காங்கிரஸ் அதை எதிர்க்கும். இந்த ஓராண்டு கால ஆட்சிக்கு, மூச்சு விடுவதற்காவது அவகாசம் அளிக்க வேண்டும். நீங்கள் ஒப்பிட்டு பார்த்தீர்கள் என்றால், ஒரு சிறப்பான ஆட்சியை ஸ்டாலின் கொடுத்திருக்கிறார். மத்திய அரசின் பொருளாதார பலம் வேறு, மாநில அரசின் பொருளாதார பலம் வேறு. இருந்தாலும் ஆட்சிக்கு வந்த உடனேயே பெட்ரோலுக்கு மூன்று ரூபாய்க்கு குறைத்திருக்கிறார். ஆனால், மோடி அவர்கள் கடந்த 7 வருடங்களாக குறைக்கவில்லை.